வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குளிக்கும்போது வீடியோ.. "ப்ளீஸ் டெலிட் செய்துடு".. காமுகர்களிடம் கதறிய மாணவி.. தீக்குளித்த பரிதாபம்!

ஆபாச வீடியோ எடுத்ததால் 15 வயது சிறுமி தீக்குளித்துவிட்டார்

Google Oneindia Tamil News

வேலூர்: குளிக்கும்போது திருட்டுத்தனமாக காமுகர்கள் வீடியோ எடுத்துவிட்டனர்.. அதனால் அந்த 15 வயது பிஞ்சு மண்ணெணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டார்.. இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்த மாணவி.. 15 வயது ஆகிறது.. பென்னாத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு இப்போதுதான் படித்து முடித்துள்ளார்.

இந்த மாணவியின் வீட்டு பாத்ரூமில் மேற்கூரை இல்லை போலும்.. அதை வீட்டில் உள்ள பெரியவர்களும் சரி செய்ய காணோம்.

கசமுசாவில்.. லயித்து போன லவ் ஜோடி .. பார்த்துவிட்ட 8 வயது சிறுவன்.. கொடூரமாக கழுத்து அறுத்து கொலைகசமுசாவில்.. லயித்து போன லவ் ஜோடி .. பார்த்துவிட்ட 8 வயது சிறுவன்.. கொடூரமாக கழுத்து அறுத்து கொலை

பூனை கண்ணன்

பூனை கண்ணன்

சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் இவர் குளித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆகாஷ் என்பவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.. இந்த ஆகாஷூக்கு பூனை கண்ணன் என்று இன்னொரு பட்ட பெயரும் உள்ளதாம். 22 வயசாகிறது.

சிறுவர்கள்

சிறுவர்கள்

குளிப்பதை வீடியோ எடுக்க போன பூனை கண்ணன், தன்னுடன் பிளஸ்-2 முடித்துள்ள 17 வயது சிறுவர்களையும் அழைத்து சென்றுள்ளார்.. 3 பேருமாக சேர்ந்துதான் வீடியோ எடுத்துள்ளனர்.. இது எதுவுமே சிறுமிக்கு தெரியாத நிலையில், ஒருவாள் மாணவியை நேரில் பார்த்து ஆசைக்கு இணங்கும்படி தொல்லை தந்துள்ளனர். வீடியோ எடுத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

மெசேஜ்

மெசேஜ்

ஆனால் முதலில் இதை மாணவி நம்பவே இல்லை.. அதற்கு பிறகு 3 பேரும் சேர்து வீடியோவை செல்போனுக்கு அனுப்பியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. அந்த வீடியோவையும் மாணவிக்கு அவர்கள் அனுப்பவில்லை, சொந்தக்காரரின் செல்போனுக்கு அனுப்பி வைத்து, மாணவியை பார்க்க சொல்லி மெசேஜ் தந்துள்ளனர். திடுக்கிட்ட மாணவி உடனடியாக அந்த வீடியோவை டெலிட் செய்தார்.

அழுகை

அழுகை

ஆனாலும் 3பேரும் அடுத்தடுத்து அந்த வீடியோவை அனுப்பி கொண்டே இருந்தனர்.. டெலிட் செய்துவிடும்படி கெஞ்சி அழுதிருக்கிறார் மாணவி.. அந்த சமயத்திலும் ஒதுக்குப்புறமாக உடனே வர வேண்டும், வீடியோ பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர்.. உடனே வராவிட்டால், குளிக்கும் வீடியோவை எல்லா சோஷியல் மீடியாவிலும் போட்டிவிடுவோம் என்றனர்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அவர்கள் கூப்பிட்டு, காட்டுப்பக்கம் ஒதுங்கவும் மனசில்லாமல், வீடியோ இருப்பதையும் ஜீரணிக்க முடியாமல், அவமானத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார் மாணவி.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்... உடம்பெல்லாம் பற்றி எரிந்து மாணவி அலறி துடிக்கவும், அக்கம்பக்கத்தினர் வந்து மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. இப்போது சிகிச்சைக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. ஆனால் உடல்நிலை மோசமாக உள்ளதாம்.

புகார்

புகார்

இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் தரப்பட்டது.. வழக்கு பதிவு செய்த போலீசார், சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் விசாரணை நடத்தினார்... அப்போதுதான் மேற்கண்ட விஷயத்தை வாக்குமூலமாக தந்தார்.. அந்த பூனை கண்ணனை காணவில்லை.. பிறகு வலைவீசி பிடித்ததில் 3பேரையுமே போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோரிக்கை

கோரிக்கை

இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தை அதிர வைத்து வருகிறது. இந்த 3 பேருக்கும் கடுமையான தண்டனை தர வேண்டும் என்பதே நம்முடைய அனைவரின் கோரிக்கையாக உள்ளது.. வயசு பிள்ளை இருக்கிற வீட்டில் பாத்ரூமில் மேற்கூரையை எப்படியாவது பெற்றோர் போட்டிருக்கலாம்!

English summary
3 boys black mail 15 year old old girl and attempts suicide near vellore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X