நடிகை ராகவியின் கணவர் தற்கொலை.. "கேமிரா திருடன்" என தகவல் பரவியதால் தூக்கில் தொங்கினார்
Recommended Video
வேலூர்: நடிகை ராகவியின் கணவர் ஏரிக்கரை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜா சின்ன ரோஜா, மகராசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராகவி. சினிமாவை தவிர சின்னத்திரையில் கடந்த 26 வருஷங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார்.
இவரது சீரியல்களுக்கு தனி வரவேற்பும் உண்டு. இவரது கணவர் பெயர் சசிகுமார். கேமராமேன் ஆக வேலை பார்க்கிறார். பூந்தமல்லி அருகே வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில், ஜோலார் பேட்டை ஜங்ஷன் பஸ் ஸ்டேண்ட் பக்கம் ஒரு ஏரிக்கரை உள்ளது. இந்த ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
20 வயது சுஷ்மிதா.. 9 மாத கர்ப்பிணி.. நாய் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி.. கொடுமைக்கார கணவன்!
இதையடுத்து, மனைவி ராகவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வாட்ஸ்அப்பில் ஒரு பொய்யான தகவலை பரப்பியதால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டதாக கதறினார். ஒரு தனியார் ஸ்டுடியோவில் கேமிரா மேனாக வேலை பார்த்த சசிக்குமார், வாடகைக்கு எடுத்து கொண்டு போன கேமிராவை திரும்பவும் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த கேமிரா தொலைந்து விட்டதாகவும் சசிகுமார் சொல்லி உள்ளார். ஆனால் கடன் சுமை காரணமாக, அதை அடகு வைத்து விட்டதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. இதனால் அதே கம்பெனியில் வேலை பார்க்கும் மகேஷ்குமார் என்பவர் சசிக்குமாரை "கேமரா திருடன்" என்று சொல்லி கேமராமேன்களுக்கு என்று தனியாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் விருகம்பாக்கம் ஸ்டேஷனிலும் சசிகுமார் புகார் அளிக்கப்பட, அதன்பேரில் போலீசாரும் சசிகுமாரை கூப்பிட்டு விசாரித்தனர். இதுதான் சசிகுமாருக்கு பெருத்த அவமானமாகி உள்ளது. இதையே நினைத்துமன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார்.
அதனால் போன 9 ந்தேதி வெளியே போய்விட்டு வருகிறேன் என்று சொன்னவர்தான் அதற்கு பிறகு வீடு திரும்பவில்லையாம். இதுவரை பெங்களூரில் தங்கி இருந்த சசிகுமார், தற்கொலை செய்யும் முடிவோடுதான், ஜோலார் பேட்டை ஏரிகரைக்கு வந்து அங்கிருந்த மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.