வேலூர் அருகே ஆட்டோவில் வந்த பெண்கள்.. பார்த்தது எவ்வளவு பெரிய வேலை தெரியுமா.. நொறுங்கிய பிளான்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களை திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அங்கன்வாடி அமைப்பாளர் ராமவதி (வயது 47) மற்றும் ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த ஜம்ஷிகா (45) ஆகியோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றியதாக புகார் எழுந்தது. அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அரசு வேலையில் சேர வேண்டும் என்பது இன்றைக்கு பலரது கனவாக உள்ளது. ஆனால் அரசு வேலையில் சேர போட்டித் தேர்வுகள் எழுத வேண்டும். பல லட்சம் பேரில் ஒருவருக்கு தான் வேலை கிடைக்கிறது. அதுவும் விடாமுயற்சியும், கடின உழைப்பும், சரியான புத்திசாலித்தனமும், நல்ல படிப்பறிவும் உள்ளவர்களால் மட்டுமே அரசு வேலையில் சேர முடியும் என்கிற நிலை உள்ளது.

அதேநேரம் பலர் என்ன தான் முயற்சித்தாலும் குரூப் 4 தேர்வில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளனர். அதில் சிலர் குறுக்குவழியில் அரசு வேலையில் சேர விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றுவது நடக்கிறது. அடிக்கடி இப்படி ஏமாறுவது நடக்கிறது. அதேபோல் போக்குவரத்து கழக வேலை, அங்கன்வாடி வேலை, ரேஷன் கடை வேலை போன்ற நேர்முகத் தேர்வு அடிப்படையிலான வேலையில் லஞ்சம் கேட்பதும் அடிக்கடி நடக்கிறது. சிலர் இப்படி ஏமாற்றுகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்ற முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைதாகி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை பலர் சமர்பித்துள்ளனர். இதற்காக விண்ணப்பித்தவர்களை திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அங்கன்வாடி அமைப்பாளர் ராமவதி (வயது 47) மற்றும் ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்த ஜம்ஷிகா (45) ஆகியோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வேலை வாங்கித்தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆலங்காயம் பகுதியை சேர்ந்த அப்துல் ஷாஹித் என்பவரிடம் ராமவதி, மற்றும் ஜம்ஷிகா ஆகியோர் செல்போனில் பேசி அவரது மனைவிக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் முன் பணம் கேட்டார்களாம். இதைத்தொடர்ந்து பணம் தருவதாகக்கூறி குறிப்பிட்ட இடத்துக்கு அவர்களை வரவழைத்தனர். அங்கு ஆட்டோவில் வந்த அவர்கள் இருவரையும் பிடித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருவர் மீதும் வழக்குப்பதிவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications