தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய அமைப்பினரை ஏன் கைது செய்யவில்லை.. கேட்கிறார் பாஜக இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம் கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்
சென்னை: "பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றுவது எல்லாம் சின்ன சின்ன குற்றங்கள்... இதுக்கெல்லாம் 19 வயது இளைஞரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய அமைப்பினரை ஏன் கைது செய்யவில்லை" என்று வேலூர் இப்ராஹிம் கேள்வி எழுப்பி உள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
ஏகத்துவ பிரசார ஜமாத் என்கிற அமைப்பை நிறுவி நடத்தி வருபவர் வேலூர் இப்ராஹிம்... இது பாஜகவுக்கு ஆதரவான அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் இப்ராஹிம்.. அதனால் வேலூர் இப்ராஹிம்க்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன இஸ்லாமிய அமைப்புகள்.

இந்நிலையில், ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் என்று பேசிய இஸ்லாமிய அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார்.. அதன்படி இந்த நடைபயணம் சென்னை மெரினா பீச்சில் உள்ள காந்தி சிலையிலிருந்து துவங்கியது..
இதில் இப்ராஹிம் தலைமையில் பலர் கலந்து கொண்டு, தலைமை செயலகம் நோக்கி நடைபயணத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இப்ராஹிம் சொன்னதாவது: "ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம், ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை தற்கொலை படையாக மாறி தகர்ப்போம் என்று போலீசாரையும் நீதித்துறையையும் இழிவாக பேசிய இஸ்லாமிய அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றுவது போன்ற சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபட்ட 19 வயது...
இளைஞரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய அமைப்பினரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications