வேலூர் கோட்டையை கைப்பற்றினார் "DMK".. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் பலம் 38-ஆக உயர்வு
Recommended Video
வேலூர்: வேலூரில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதை அடுத்து நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்பிக்களின் பலம் 38-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி 38 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. வேலூரில் தேர்தலுக்கு முன்பாக திமுக பிரமுகர் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டதால் அந்த தொகுதிக்கு தேர்தல் ரத்தானது.

5-ஆம் தேதி தேர்தல்
இதையடுத்து மற்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் தேனி எம்பியாக ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார். இந்த நிலையில் வேலூருக்கு எம்பி தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு நடந்தது.

முன்னிலை
இதில் திமுகவின் கதிர் ஆனந்த், அதிமுகவின் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பத்திலிருந்து ஏசி சண்முகமும், கதிர் ஆனந்தும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.

எத்தனை வாக்குகள்
இந்த நிலை மாறி கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு திமுக வெற்றி பெற்றது. திமுகவின் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளையும், அதிமுகவின் ஏசி சண்முகம் 4,77,199 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 26,995 வாக்குகளையும் பெற்றனர்.

யார் வெற்றி
இந்த நிலையில் கதிர் ஆனந்த், ஏசி சண்முகத்தைக் காட்டிலும் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் 38 ஆக உயர்ந்துள்ளது.
-
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்












Click it and Unblock the Notifications