போதை மருந்து வாங்கிக் கொடுக்காததால் புவனேஸ்வரி செய்த விபரீதம்! கள்ளக்காதலன் அதிர்ச்சி
திருப்பத்தூர்: போதை மருந்து வாங்கிக் கொடுக்காததால் கள்ளக்காதலி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு அடுத்த சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த தியாகு (36) என்பவர் திருப்பத்தூர் பகுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரிடம் கூலி தொழிலாளியான குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி (35) ஆகிய இருவரும் வேலை செய்து வந்துள்ளனர்.
புவனேஸ்வரிக்கு முதலாளியாக இருந்த தியாகுவை பிடித்துப் போனதால் புவனேஸ்வரிக்கும் தியாகுவுக்கும் இடையே கள்ளக் காதல் மலர்ந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரம் அறிந்த வேலாயுதம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக மனைவி புவனேஸ்வரியை கைவிட்டு சொந்த ஊரான குடியாத்தம் சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம்.

தலைக்கேறும் போதை
இந்த நிலையில் இருவரும் கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். ஒவ்வாமை காரணமாக அடிக்கடி போதை மாத்திரை மற்றும் மருந்தை பயன்படுத்தி வந்துள்ளார்கள். போதை தலைக்கேறிய பின்னர் இருவரும் உல்லாசமாக அடிக்கடி இருந்து வந்துள்ளார்கள்.

சிகிச்சை
இதேபோன்று வருடக்கணக்கில் போதை மருந்தை எடுத்துக் கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தியாகு போதை மருந்தை கைவிட நினைத்து அதற்கு ஏற்றவாறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தபோதிலும் புவனேஸ்வரி போதை மருந்து மற்றும் மாத்திரைகளை கை விடாததால் செய்வதறியாது திகைத்த தியாகு ஒரு கட்டத்தில் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுப்பதை நிறுத்தி இருக்கிறார்

மருந்து கிடைக்கவில்லை
இருந்த போதிலும் புவனேஸ்வரியே மருந்து கடைக்கு சென்று போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் புவனேஸ்வரிக்கு பணம் கொடுக்காமல் உணவுப் பொருட்களை மட்டும் வாங்கி கொடுத்துள்ளார். போதை மருந்து இல்லாமல் மனமுடைந்த புவனேஸ்வரி ஆள் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கள்ளக்காதலன்
இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இதுகுறித்து கள்ளக் காதலனான தியாகுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications