வேலூரே குலுங்குது.. படையெடுத்து வந்த ஐடி ஊழியர்கள்.. நாம் தமிழர் தீபலட்சுமிக்காக!
நாம் தமிழர் கட்சிக்காக ஐடி ஊழியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
Recommended Video
வேலூர்: யாருப்பா சொன்னது.. விவசாயி சின்னம் இருந்தால், விவசாயிகள் மட்டும்தான் ஓட்டு போடுவாங்கன்னு.. தீபலட்சுமிக்கு பாருங்க.. சென்னை, பெங்களூரில் இருந்து ஐடி ஊழியர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வேலூருக்கு வந்துவிட்டார்கள்!
அதிமுக, திமுக என்ற ஜாம்பவான் கட்சிகளுக்கு நடுவில் நுழைந்து தில்லாக போட்டியில் குதித்துள்ளது நாம் தமிழர் கட்சி. இங்கு அக்கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமி போட்டியிடுகிறார்.
நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கூட இப்படி இல்லை.. தேர்தல் முடிவின் தாக்கமோ அல்லது அரசியல் கட்சிகளில் 3-வது இடத்தை முன்னேற்றமோ தெரியவில்லை.. ஐடி ஊழியர்கள் எல்லாம் கிளம்பி வேலூருக்கு பிரச்சாரம் செய்ய வந்துவிட்டார்கள்.

ஊழியர்கள்
சென்னை, பெங்களூரில் உள்ள முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தான் இவர்கள் எல்லோரும், வாணியம்பாடி, அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஐடி ஊழியர்கள் தீபலட்சுமிக்காக ஓட்டு கேட்டு வருகின்றனர்.

விவசாயம்
இதை பற்றி விக்னேஷ் என்ற ஐடி ஊழியர் சொல்கிறார், "நாங்கள் தலைமுறை தலைமுறையா விவசாய குடும்பம்தான். என்னமோ தெரியல, என்னையும் அறியாமல் நான் அதில இருந்து வெளியேறிட்டேன். ஆனால் இப்போ விவசாயத்தின் முக்கியத்துவத்தை என்னை போன்ற நிறைய இளைஞர்களுக்கு உணர்த்தி உள்ளது நாம் தமிழர் கட்சி. அது முன் வைக்கும் தற்சார்பு பசுமை தாய்மை உற்பத்தி பொருளாதாரக் கொள்கை ஒன்று போதும், எல்லாருக்கும் வேலை கிடைச்சிடும்" என்கிறார்.

பிரச்சாரம்
இப்படி ஐடி ஊழியர்கள் லீவு போட்டுவிட்டு வந்து பிரச்சாரம் செய்வதை பிற கட்சிகளும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளன. பிரச்சார கூட்டங்களுக்கு ஆட்டு மந்தைகள் போல வேனில் மக்களை அழைத்து செல்வதை பார்திருக்கிறோம்.. ஓட்டுக்கு 500, 1000 பணத்தை தருவதை பார்த்திருக்கிறோம்!

கரும்பு விவசாயி
ஆனால் ஐடி ஊழியர்கள் பந்தாவாக டிரஸ் போட்டுக் கொண்டு, கையில் கரும்பு விவசாயி சின்னத்தை கெத்தாக பிடித்து கொண்டு வேலூரில் ஓட்டுகேட்டு வருவதை பார்க்கவே புதுசாக இருக்கிறது.. மக்களை நெருங்கி செல்லும் நாம் தமிழர் கட்சியின் அடுத்த வெற்றி இது!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications