Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் படிப்பு.. கல்வித்தந்தை.. துரைமுருகனின் மகன்.. யார் இந்த வேலூர் எம்பி கதிர் ஆனந்த்?

Subscribe to Oneindia Tamil

வேலூர் : வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.

திமுகவில் ஒவ்வொரு லோக்சபா தேர்தலுக்கும் ஒரு சீனியர் நிர்வாகியின் மகன் வேட்பாளராக தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் எப்படி கே.என்.நேருவின் மகன் களமிறக்கப்பட்டாரோ அதேபோல், கடந்த தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறக்கப்பட்டார். இதனால் வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக மீண்டும் திமுக மீது விமர்சனங்கள் எழுந்தன.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress CN Annadurai 2024 2024

ஆனால் கதிர் ஆனந்த் 33 வயதில் இருந்தே திமுகவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பின்னரே லோக்சபா தேர்தலில் கதிர் ஆனந்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் படிப்பை நிறைவு செய்த கதிர் ஆனந்த், மேல்படிப்பிற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பால்ட்வின் கல்லூரியில் சர்வதேச பிஸினஸ் பிரிவில் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். அதன்பின் வேலூரில் பிரபலமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியை நடத்தி வந்த கதிர் ஆனந்த், இன்னொரு பக்கம் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இதனையறிந்த திமுக தலைமை 2019ஆம் ஆண்டு முதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தது. சீட் கொடுக்கப்பட்ட போது கதிர் ஆனந்த் நெற்றியில் பொட்டு வைக்காமல், மேல் நெற்றியில் பொட்டு வைத்திருப்பது பேசுபொருளாகியது.

பின்னர் கதிர் ஆனந்த் போட்டியிட்ட வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலையே ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். இதன்பின் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏசி சண்முகத்தை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றார். லோக்சபா தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் என்பது மிகவும் குறைந்த வித்தியாசம் தான்.

இதனால் கதிர் ஆனந்திற்கு மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்தது. ஏனென்றால் உள்ளூர் நிர்வாகிகள் பிரச்சனை, துரைமுருகனுக்கு இருக்கும் செல்வாக்கில் பாதி கூட கதிர் ஆனந்திற்கு இல்லாதது என்று பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் எம்பி-யாக சில சர்ச்சைகளிலில் சிக்கினார்.

ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் துரைமுருகனும், கதிர் ஆனந்தும் பம்பரமாக சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வன்னியர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர் வாக்குகளையும் பெற வேண்டும் என்று தீவிரமாக இருந்தனர். அது தற்போது சரியாக திமுகவின் கதிர் ஆனந்த் பக்கம் வந்துசேர்ந்துள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் பசுபதி மற்றும் பாஜகவின் ஏசி சண்முகத்தை விடவும் 2,15,702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+