அமெரிக்காவில் படிப்பு.. கல்வித்தந்தை.. துரைமுருகனின் மகன்.. யார் இந்த வேலூர் எம்பி கதிர் ஆனந்த்?
வேலூர் : வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.
திமுகவில் ஒவ்வொரு லோக்சபா தேர்தலுக்கும் ஒரு சீனியர் நிர்வாகியின் மகன் வேட்பாளராக தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகிறார். இந்த தேர்தலில் எப்படி கே.என்.நேருவின் மகன் களமிறக்கப்பட்டாரோ அதேபோல், கடந்த தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறக்கப்பட்டார். இதனால் வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக மீண்டும் திமுக மீது விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் கதிர் ஆனந்த் 33 வயதில் இருந்தே திமுகவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பின்னரே லோக்சபா தேர்தலில் கதிர் ஆனந்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் படிப்பை நிறைவு செய்த கதிர் ஆனந்த், மேல்படிப்பிற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு பால்ட்வின் கல்லூரியில் சர்வதேச பிஸினஸ் பிரிவில் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். அதன்பின் வேலூரில் பிரபலமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியை நடத்தி வந்த கதிர் ஆனந்த், இன்னொரு பக்கம் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இதனையறிந்த திமுக தலைமை 2019ஆம் ஆண்டு முதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தது. சீட் கொடுக்கப்பட்ட போது கதிர் ஆனந்த் நெற்றியில் பொட்டு வைக்காமல், மேல் நெற்றியில் பொட்டு வைத்திருப்பது பேசுபொருளாகியது.
பின்னர் கதிர் ஆனந்த் போட்டியிட்ட வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலையே ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். இதன்பின் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏசி சண்முகத்தை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றார். லோக்சபா தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் என்பது மிகவும் குறைந்த வித்தியாசம் தான்.
இதனால் கதிர் ஆனந்திற்கு மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்தது. ஏனென்றால் உள்ளூர் நிர்வாகிகள் பிரச்சனை, துரைமுருகனுக்கு இருக்கும் செல்வாக்கில் பாதி கூட கதிர் ஆனந்திற்கு இல்லாதது என்று பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் எம்பி-யாக சில சர்ச்சைகளிலில் சிக்கினார்.
ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் துரைமுருகனும், கதிர் ஆனந்தும் பம்பரமாக சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வன்னியர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர் வாக்குகளையும் பெற வேண்டும் என்று தீவிரமாக இருந்தனர். அது தற்போது சரியாக திமுகவின் கதிர் ஆனந்த் பக்கம் வந்துசேர்ந்துள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் பசுபதி மற்றும் பாஜகவின் ஏசி சண்முகத்தை விடவும் 2,15,702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
-
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications