Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் 20 ஆண்டுகள் சிறை.. வேலூர் நீதிபதி பேச்சு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: 18 வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். 18 வயது பூர்த்தியடையாத ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தால் அந்த பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட நபர் மற்றும் திருமணம் செய்து வைத்த பெற்றோர், உறவினர்கள் இந்த சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்று வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி இளவரசன் கூறினார்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு உயர்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன் வரவேற்றார். பின்னர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் குழந்தை திருமணத்துக்கு எதிரான உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

Marrying off a girl under the age of 18 will result in 20 years imprisonment says Vellore judge

தொடர்ந்து, வேலூர் மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன் பேசுகையில், "பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 3 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதாக கூறினார்கள். தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர்கிறார்களா? என்பதை உறுதி செய்வது நம்முடைய கடமையாகும். குறிப்பாக மாணவிகள் உயர்கல்வி பயிலும் பொழுது ஒரு வகையில் குழந்தை திருமணம் தடுக்கப்படுகிறது.

ஒரு சில கிராமப்புற பகுதிகளில் 14 அல்லது 15 வயதிற்குள்ளாகவே பெண் குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. இதுபோன்ற பல்வேறு வழக்குகளை நாங்கள் கையாண்டு வருகிறோம்.

18 வயது பூர்த்தி அடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். 18 வயது பூர்த்தியடையாத ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தால் அந்த பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட நபர் மற்றும் திருமணம் செய்து வைத்த பெற்றோர், உறவினர்கள் இந்த சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள்.

தொடர்ந்து, குழந்தை திருமணத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இளவரசன், கலெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், சார்பு நீதிபதி வாசுதேவன், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (சமூக நீதி, மனித உரிமைகள்) ரவீந்திர பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) சிவக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்சித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+