அமைச்சர் ஆர் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு.. வேலூர் மருத்துவமனையில் அனுமதி - சிகிச்சை
வேலூர்: தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அமைச்சர் ஆர் காந்தி திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் ஆர் காந்தி. இவர் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் அமைச்சர் ஆர் காந்தி திடீரென்று வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அமைச்சர் ஆர் காந்திக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அவர் தற்போது நலமாக இருக்கிறார். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். இருப்பினும் அமைச்சர் ஆர் காந்தி எந்த மாதிரியான உடல்நல பிரச்சனையை எதிர்கொண்டார்? என்பது தெரியவில்லை.
அமைச்சர் ஆர் காந்தி திமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். ராணிப்பேட்டை சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 1996, 2006, 2011, 2016, 2021 ஆகிய சட்டசபை தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications