அன்று பாஜகவை வென்ற நோட்டா.. இன்று வாக்கு வித்தியாசத்தையே விஞ்சிய தருணம்.. கட்சிகள் அதிர்ச்சி
Recommended Video
வேலூர்: ஆர் கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவுடன் போட்டி போட்ட நோட்டா இன்று வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வித்தியாசத்தையே விஞ்சியுள்ளது.
None of the Above என்பதன் சுருக்கமே NOTA ஆகும். அதாவது யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதுதான் இது. தேர்தலில் பங்குக் கொள்ளும் வேட்பாளர்களுக்கு எதிராக யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதே இதன் நோக்கமாகும்.
இந்த நடைமுறை நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்பட்டது.

நோட்டாவின் நோக்கம்
தமிழகத்தை பொருத்தமட்டில் நீலகிரி இடைத்தேர்தலில் இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது. அதாவது வாக்குச்சீட்டு போன்ற ஒன்றில் தப்பு போன்ற குறியீடு இருக்கும் இதுதான் நோட்டாவின் சின்னமாகும். இது பயன்படுத்தப்பட்ட தேர்தலில் இருந்து இந்த சின்னத்துக்கும் கணிசமாக வாக்குகள் பதிவாகி வருகின்றன.

இடைத்தேர்தல்
இன்னும் கேட்டால் முக்கிய கட்சிகளுடனேயே போட்டி போடும் அளவுக்கு நோட்டா குறித்த விழிப்புணர்வு மக்களிடம் உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது தொகுதியான ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

எத்தனை வாக்குகள்
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தேர்தலில் அமமுகவின் டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் மதுசூதனனும் மூன்றாம் இடம் திமுகவின் மருது கணேஷும் பெற்றனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகளை பெற்றார்.

நாடாளுமன்றத் தேர்தல்
பாஜகவின் நாகராஜ் 1,38 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் நோட்டாவோ பாஜக முந்தி 2,373 வாக்குகளை பெற்றது. இதன் வாக்குச் சதவீம்த 1.34 ஆகும். அது போல் இந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று முடிவாகின.

அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
இதில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி ஆகியன போட்டியிட்டன. திமுகவின் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இவர் ஏசி சண்முகத்தை விட 8,141 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் ஏசி சண்முகத்துக்கு , 3-ஆவது இடம் நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமிக்கு கிடைத்தது. இதில் நோட்டா பெற்ற வாக்குகள் 9,417 ஆகும். இது திமுக பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாகும். இதனால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications