சூடு பிடிக்கும் வேலூர் களம்.. ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது பாய்ந்தது வழக்கு
வேலூர்: அனுமதி பெறாமல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்காக, திமுக தலைவர் ஸ்டாலின், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வேலூர் தொகுதி தேர்தல் அனல் பறக்கிறது. திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் ஸ்டார் வேட்பாளர்களாக அறியப்படுகிறார்கள்.

ஏற்கனவே பொதுத் தேர்தலின்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணப் பட்டுவாடா அத்துமீறிப் போன புகாரில் இத்தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே, இந்த நிலையில், பாதுகாப்பு கெடுபிடிகள் இம்முறை மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் வியூகம் தொடர்பாக, திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆம்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக அதிமுகவினர் சார்பில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி அனுமதியின்றி கூட்டம் நடத்தியதை உறுதி செய்தனர்.
இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications