வேலூர் தொகுதியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள்... வீதி, வீதியாக தீவிரப் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

வேலூர் : வேலூர் மக்களவை தொகுதியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள், அதிமுக வேட்பாளரை ஆதரித்து வீதி, வீதியாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர்.

Tamil Nadu ministers camping in Vellore Lok Sabha constituency

அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணி செய்ய அதிமுக தலைமை பணிக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் ஆலோசனை கூட்டம்,குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, சோதனையில் இருந்து வெற்றி பெறவே, அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டுள்ளதாக கூறினார். இதனிடையே, குடியாத்தம் நகர பகுதிகளில் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

கட்சிக்கு வந்துள்ள சோதனையில் இருந்து வெற்றி பெறவே அமைச்சர்கள் வேலூர் தொகுதியில் முகாமிட்டுள்ளதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.

அதே போல், வாணியம் பாடியில் வீதி வீதியாக சென்று ஏ .சி சண்முகத்துக்கு வருவாய் துறை அமைச்சர் ஆர் .பி உதயகுமார் ஆதரவு திரட்டினார் அப்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், பொய் சொல்வதிலே திமுகவினர் வல்லவர்கள் என புகார் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+