வேலூரில் 2வதுமுறையாக ஓடிப்போன கணவன்.. மனைவி செய்த காரியத்தை பாருங்க
வேலூர்: வேலூரில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பெண்ணுடன் கணவர் ஓட்டம் பிடித்தார். இதனால் இளம் பெண், தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கைக்குழந்தையுடன் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் 22 வயதாகும் இளம்பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மீனா கடந்த 4 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் மீனாவின் கணவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணுடன் அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்று விட்டாராம்.

இதுகுறித்து இளம்பெண் மீனா கடந்த டிசம்பர் மாதம் காட்பாடி அடுத்த பொன்னை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தாராம். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் கணவரை அழைத்து வந்து சமாதானம் செய்து இருவரையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் மறுபடியும் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அந்த பெண்ணுடன் கணவர் ஓடிப்போய்விட்டாராம். இதுபற்றி பொன்னை போலீஸ் நிலையத்தில் அந்தப்பெண் தனது குழந்தையுடன் புகார் அளிக்க சென்றுள்ளார். அவரை காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி கைக்குழந்தையுடன் அவர் காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் பொன்னை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறி அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்களாம். இதனால் நொந்தபோன இளம்பெண் மீனா, கைக்குழந்தையுடன் நேற்று மாலை பொன்னை போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்க போயிருக்கிறார். அப்போது போலீசார் இதனை நாங்கள் ஏற்க முடியாது, அனைத்து மகளிர் போலீஸ் மூலம் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்களாம்.
கைக்குழந்தையுடன் காலை முதல் மாலை வரை பொன்னை, காட்பாடி என மாறி மாறி அலைந்த இளம் பெண், தன் கணவர் விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டு வீட்டிற்கே சென்றுவிட்டார். ஒரு பக்கம் கணவன் தன்னை விட்டு சென்றுவிட்ட நிலையில், கைகுழந்தையுடன் காவல் நிலையத்திற்கு மாறி மாறி அலைந்தது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications