வாணியம்பாடிக்கு விடிவு பிறக்குது.. பல நாள் பிரச்சனைக்கு வரப்போகிறது தீர்வு.. பறந்த உத்தரவு
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நீர்நிலைகளில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.. அரைகுறையாக அகற்றினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகரப்பகுதி மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல இடங்களில் நீர்நிலை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழித்தடம் இல்லாத நிலை இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது,

இந்த பிரச்சனை காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மழை நீரோடு கழிவுநீர் தேங்கி நிற்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக அந்த தொகுதி எம்எல்ஏ உள்பட பலர், திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக பலமுறை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வைத்தும் துறை சார்ந்த அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மழை காலங்களில் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீரோடு கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை தொடர்கதையாகி வருவதால் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.
அண்மையில் தொலைக்காட்சியில் செய்தி வெளிவந்ததையடுத்து இன்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் போக்குவரத்து ஆணையாளரும்மான கஜலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் வாணியம்பாடி அரசு மருத்துவமனை மற்றும் வளையாம்பட்டு, செட்டியப்பனூர் கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் மழைநீர் கழிவு நீரோடு தேங்கி நிற்பதை ஆய்வு மேற்கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது வாணியம்பாடியில் நகரப் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்பு உள்ளதாகவும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றாமல் உள்ளதாகவும் தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர், நகராட்சி கமிஷனர் மற்றும் வருவாய்த்துறையினரோடு இணைந்து முழுமையாக நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்புஅதிகாரி கஜலட்சுமி வலியுறுத்தினார்.
ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றினால் தான், நீர்நிலைகள் செல்லக்கூடிய கால்வாய்கள் முறையாக இருக்கும் என்றும், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தேசி நெடுஞ்சாலைகள் அதிகளவில் விபத்து ஏற்படும் இடங்களையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலருடன் இருந்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications