Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் விவசாயிகளுக்கு.. திருப்பூரில் இளைஞர்களுக்கு.. தமிழக அரசு வெளியிட்ட 2 சூப்பர் அறிவிப்புகள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 2½ ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார். அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்பு தொழில் செய்துவரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவுசெய்து அரசு மானிய திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ளவும், மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கவும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீன்பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Two super announcements issued by the TN Government for farmers in Vellore and for youth in Tiruppur

5000 மானியம்

அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 2½ ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.

மீன்வளர்ப்பு விவசாயிகள்

எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்து உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடையலாம். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள், விண்ணப்பங்கள் பெற காட்பாடி காந்திநகரில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் அணுகலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.

திருப்பூரில் வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாட்டில் சென்னையை தவிர 37 மாவட்டங்களில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரியலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களில் செயல்படும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் மட்டும் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

64 வகை வேலைவாய்ப்பு பயிற்சி

இந்த பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான செல்போன் பழுதுநீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், வயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

தகுதி என்ன

8-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படும். குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சமாக 45 நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தின்போது மதிய உணவும், காலை மற்றும் மாலை வேலைகளில் சிற்றுண்டி, தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு சீருடை, பாடப்பொருட்கள் தொழில்முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள் ஆகியவை வழங்கப்படும்.

சுயதொழில்

குறிப்பிட்ட சுயதொழில் குறித்து பயிற்சி அளிப்பதுடன், சரியான தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், தொழில் முனைவோருக்கான சிறந்த பண்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட தொழில் முனைவோர் குறித்த பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சியின் போது முக்கிய நிறுவனங்களுக்கு களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டு, அவர்களின் வெற்றிக்கதைகள் நேரடியாக எடுத்துக்கூறப்படும்.

எப்படி விண்ணப்பிக்கலாம்

பயிற்சியின் முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். வங்கிக்கடன் பெற பயிற்சி நிலைய அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தையும், திட்ட இயக்குனரையும் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+