Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாணியம்பாடி அரசு பள்ளி தலைமை ஆசிரியை அமுதாவுக்கு ஆடியோவால் வந்த சிக்கல்.. கிடைத்த பரிசு

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் அமுதா. இவர், சக ஆசிரியை ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகியது. அந்த ஆடியோவில், தமிழக அரசின் திட்டமான நான் முதல்வன் திட்டத்தை குறை கூறியதுடன் பட்டியலின மக்களை அவமரியாதை செய்யும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமுதா, நிம்மியம்பட்டுவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர், அதே பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியை ஒருவரிடம் பேசியதாக ஆடியோ சமீபத்தில் வெளியாகியது.

Vaniyambadi school headmistress who criticized Tamil Nadu government s plans transferred

அதில் கல்லூரி கனவு திட்டம் அந்த திட்டம் இந்த திட்டம் என கூறி கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ் செயல்படும் கல்வித்துறை அதிகாரிகள் உயிரை எடுப்பதாக சில அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு ஒருமையில் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசுப் பள்ளியில் மேலாண்மை குழு எனக்கூறிக் கொண்டு சிலர் வந்து கேள்வி கேட்பது அருவெறுப்பாக உள்ளதாகவும் கூறினாராம். ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களை இழிவாக பேசியும், அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு என்பது தேவையா? என அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் விமர்சனம் செய்ததாக கூறப்பட்டது.

அதாவது 'கல்லூரி கனவு திட்டம், அந்த திட்டம், இந்த திட்டம் என கூறி கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ் செயல்படும் கல்வி துறை அதிகாரிகள் உயிரை எடுக்கிறார்கள் என்றும் அரசின் திட்டங்களையும், அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு எனக் கூறிக் கொண்டு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து கேள்வி கேட்பது அருவெறுப்பாக உள்ளது என்றும் அமுதா பேசியதாக ஆடியோ ஒன்று பெயரில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியை அமுதாவை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+