வேலூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விஏஓவை ஆடிப்போக முதியவர்.. 4 பிரிவில் பாய்ந்த வழக்கு
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் முகாம் நடந்தது. இந்த முகாமில் வனத்துறையினர் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு அதிகாரிகள் துணை போவதாக ஒரு முதியவர் குற்றம்சாட்டினார். அவர் ஆவேசமாக பேசியதுடன், விஏஓ உள்ளிட்ட அதிகாரிகளை வசைபாடினாராம். இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் அரசு அதிகாரிகளை அசிங்கமாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக முதியவர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் முகாமானது நேற்று நடைபெற்றது இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளைக் கோரிக்கை மனுக்களாக அரசு அலுவலர்களிடம் வழங்கினர் இந்நிலையில் உப்புப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடபதி (60) என்ற முதியவர் அந்த கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அந்த இடத்தினை மீட்க வேண்டும் எனக்கூறி கோரிக்கை மனுவை வழங்கியதாக தெரிகிறது..

இந்த மனுவை வழங்கிய பின்பு அவர் வனத்துறையினர் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் அதேபோல் நான் கொடுத்த மனுவிற்கு ரசீது ஏன் தரவில்லை என முகாமில் ஆபாச வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனால் அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் ஷாபுதீன் என்பவர் முதியவரிடம் பேசி சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததோடு கிராம நிர்வாக அலுவலருக்கும் முதியவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கை கலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் முதியவர் வெங்கடபதிக்கு கண்ணின் ஓரமாக லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது..
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு தாலுக்கா உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவர் முதியவரை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து முகாமில் ஆபாச வார்த்தைகளால் கூச்சலிட்டதால் அவரை போலீசார் அங்கிருந்த அழைத்து சென்றதாக கூறப்படுகிறது,.
இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஷாபுதீன் கொடுத்த புகாரின் பேரில் முதியவரை ஆற்காடு தாலுக்கா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முகாமில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications