நாளை வேலூரில் தேர்தல்.. இன்று அதிகாலையே சென்று அத்திவரதரை தரிசித்த கதிர் ஆனந்த்.. பரபர பேட்டி!
வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் இன்று காலை வழிபாடு நடத்தினார்.
Recommended Video

வேலூர்: வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் இன்று காலை வழிபாடு நடத்தினார்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் வேலூரில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் இதற்கான பிரச்சாரம் நேற்றோடு முடிவிற்கு வந்தது.
இந்த நிலையில் கதிர் ஆனந்த் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் இன்று காலை வழிபாடு நடத்தினார். காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் தற்போது இந்தியா முழுக்க பிரபலம். தமிழகத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இங்கு குவிந்து வருகிறார்கள்.
அதேபோல் பல மாநிலங்களில் இருந்து இவரை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் கூட்டமாக காஞ்சிபுரத்தை நோக்கி படை எடுத்து வருகிறார்கள். ஆடி மாதம் என்பதால் தற்போது அங்கு கூடுதல் கூட்டம் கூடி வருகிறது.
இளம் மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி அளிக்கும் அத்திவரதரை கதிர் ஆனந்த் தரிசித்தது பெரிய வைரலானது. நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று அவர் வழிபாடு நடத்தி உள்ளார். இதற்கு அவர் செய்தியாளர்களிடம் விளக்கமும் அளித்தார்.
அதில், திமுக ஆன்மீக பாதையில் செல்லவில்லை. நாங்கள் எப்போதும் போல ஏற்கனவே பயணித்த பாதையில் தான் செல்கிறோம். நாங்கள் ஏன் மக்களுடன் உடன் இருக்க கூடாது. அப்படியே திமுக ஏதோ தவறு செய்வது போல பேச வேண்டாம்.
நீங்கள் நினைப்பது மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் மத ரீதியாக செயல்படவில்லை, நீங்களே எதுவும் சொல்ல வேண்டாம். நீங்களே எங்களை ஜோடிக்க வேண்டாம். மக்கள் எதை செய்கிறார்களோ, அவர்களோடு நாங்கள் உடன் நிற்கிறோம், என்று அத்திவரதரை தரிசித்த பின் கதிர் ஆனந்த் பேட்டி அளித்தார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications