அந்த அளவுக்கு தமிழகத்தின் மானத்தை வாங்கி இருக்காங்க... வேலூரில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Recommended Video

வேலூர்: பிரதமர் மோடியின் அடிமைகள் யார் என்று கேட்டால் சரியாக மக்கள் சொல்வதாகவும் அந்த அளவிற்கு தமிழகத்தின் மானத்தை வாங்கி இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து முக்கிய தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

உதயநிதி குற்றச்சாட்டு
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் "
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் திமுக மீது எப்படியாவது ஒரு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பொய்யான ஒரு பழியைப் போட்டு தேர்தலை நிறுத்தினர்.

அதிமுக டெபாசிட் வாங்க கூடாது
ஆனால் தற்போது வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் லோக்சபா தேர்தல் நடைபெற போகிறது அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றியடையச் செய்ய வேண்டும்
. அதேபோன்று எதிர்க் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் வாங்காத அளவிற்கு கதிர் ஆனந்தின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தின் மானம்
தமிழகத்தில் பிரதமர் மோடியின் அடிமைகள் இரண்டு பேர் இருக்கின்றார்கள். தமிழகத்தின் முதல்வர் யார் என்று கேட்டாலும் தெரியாது. ஆனால் பிரதமர் மோடியின் அடிமைகள் யார் என்று கேட்டால் சரியாக மக்கள் சொல்கிறீர்கள். அந்த அளவிற்கு தமிழகத்தின் மானத்தை வாங்கி இருக்கிறார்கள்.

முதல்வருக்கே பாதுகாப்பில்லை
தமிழகத்தின் முதல்வர் பழனிச்சாமி தமிழகத்துக்கு வர வேண்டிய எந்த ஒரு திட்டத்தையும் வரவிடாமல் தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாஜகவிடம் அடகுவைத்து தன்னுடைய முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி இறந்து போனார் என்பது யாருக்கும் தெரியாது . ஒரு முதல்வருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஆட்சி எடப்பாடி ஆட்சி ஆகையால் இந்த ஆட்சிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்" இவ்வாறு பேசினார்.












Click it and Unblock the Notifications