அமைதியாக நடந்து முடிந்தது வேலூர் லோக்சபா தேர்தல்.. அணைக்கட்டு தொகுதியில் வாக்குப்பதிவு அமோகம்
Recommended Video
வேலூர்: வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில் நடந்தது. மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 62.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கான லோக்சபா தேர்தல் இன்று நடந்தது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் டி.எம்.கதிர்ஆனந்த், நாம் தமிழர் சார்பில் எஸ்.தீபலட்சுமி, உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர்.

வேலூர் தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் உள்ளனர். தேர்தலையொட்டி, வேலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது..
இத்தேர்தலில் மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதன்படி, மொத்தம் 3,752 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் (விவி பேட்) தலா 1,896 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு பணிகளில் மொத்தம் 7,552 அலுவலர்கள் ஈடுபட்டார்கள் மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க மத்திய அரசு ஊழியர்கள் 210 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதனால் மாலை 5 மணி நிலவரப்படி 62.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. வேலூர் சட்டமன்ற தொகுதியில் 58.55%, அணைக்கட்டு தொகுதியில் 67.61 %, கேவி குப்பம் தொகுதியில் 67.25 %, வாணியம்பாடியில் 52%, ஆம்பூரில் 62.94 % வாக்குகள் பதிவாகி இருந்தது.
வேலூர் தேர்தலுக்காக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் நாகராஜன் தலைமையில் சுமார் 1,600 வீரர்கள், 12 கம்பெனியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 3,937 தமிழக போலீஸார், 400 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு இருந்தார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications