வேலூர் லோக்சபா தேர்தல்.. முத்தலாக் விவகாரத்தில் அதிமுக ஆதரவே ஏ.சி. தோற்றதற்கு காரணமா?
Recommended Video
வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிறைந்த தொகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, விஷாரம் உள்ளிட்டவைகளில் முத்தலாக் மசோதாவில் அதிமுகவின் ஆதரவு நிலைப்பாட்டால் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளதற்கு ஒருவகை காரணமாக சொல்லப்படுகிறது.
வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இதில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி சீசா விளையாட்டு போல் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தன. ஒரு மணி நேரமாக பின்னிலை வகித்து வந்த திமுக தற்போது முன்னிலை வகித்து வந்தது.

தாக்கம்
தாக்கம்

எதிர்ப்பும்
இந்த மசோதாவை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில ஆண்கள் கையில் எடுத்துக் கொண்டே வருவதால் இதற்கு தடை விதிக்கும் மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு பாஜகவின் கூட்டணி கட்சிகளில் சில கட்சிகள் எதிர்ப்பும் சில கட்சிகள் ஆதரவும் தெரிவித்தன.

கூட்டணி கட்சி
இந்த நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவை தெரிவித்திருந்தது. அதே போல் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது வேலூர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டது.

அதிமுகவுக்கு
மேலும் வேலூர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுகவின் ஒரே ஒரு எம்பியான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது ஏசி சண்முகத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் வாக்குகள் அதிமுகவுக்கு கைக் கொடுக்காது என கருதப்பட்டது.

பக்க விளைவுகள்
எண்ணியது போலவே அதிமுகவுக்கு ஆம்பூர், வாணியம்பாடி பகுதி இஸ்லாமிய மக்கள் வாக்குகளை அளிக்கவில்லை என்பது வாக்கு எண்ணிக்கையில் கண்கூடாக தெரிகிறது. அதே வேளையில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த திமுக, அதிமுகவின் வாக்குகளை அள்ளி வருகிறது என்றே சொல்லலாம். முத்தலாக் தடை சட்டம் யாருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பக்க விளைவுகள்
எண்ணியது போலவே அதிமுகவுக்கு ஆம்பூர், வாணியம்பாடி பகுதி இஸ்லாமிய மக்கள் வாக்குகளை அளிக்கவில்லை என்பது வாக்கு எண்ணிக்கையில் கண்கூடாக தெரிகிறது. அதே வேளையில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த திமுக, அதிமுகவின் வாக்குகளை அள்ளியது என்றே சொல்லலாம். முத்தலாக் தடை சட்டத்தில் மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என்ற இரட்டை நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications