Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் ஓடும் ரயிலில் விழுந்த கணவர்.. பின்னாடியே மனைவி.. தடம் புரண்ட வாழ்க்கை.. கற்க வேண்டிய பாடம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் காட்பாடி ரயிலில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. மும்பையில் உணவகம் நடத்தி வந்த சிவகண்டன் மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோரின் மரணம், ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது... இந்த தம்பதிக்கு என்னதான் ஆச்சு?

கள்ளக்குறிச்சி மாவட்டம் அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன், 37. இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

Vellore Train Katpadi Rail Couple

வேலூர் காட்பாடி ரயில்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சிவகண்டன், சொந்தமாக ஹோட்டல் நடத்தி வந்தார். சிவகண்டனின் பாட்டி இறந்ததால், இறுதி சடங்குகளுக்கான காரியம், திருக்கோவிலுாரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள, மும்பையிலிருந்து திருநெல்வேலி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருவரும் வந்துள்ளனர்..

ஓடும் ரயிலின் வாசல் அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கணவன் விழுந்துவிட்டார்.. இதை பார்த்து துடிதுடித்த மனைவி, கணவனை காப்பாற்ற போனார்.. கடைசியில் அவரும் ரயிலில் விழுந்து இறந்துவிட்டார்..

ஓடும் ரயிலில் சோகம்

தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சக பயணிகள் இந்த கோர விபத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்... உடனடியாக அந்த பகுதி மக்கள் களம்பூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காட்பாடி ரயில்வே போலீசார் சிவகண்டன், கலையரசி உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஊர் திரும்பிய தம்பதியினர், சடலமாக திரும்புவதை அந்தப் பகுதி மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. தன் பாட்டியின் காரியத்திற்காக வந்த சிவகண்டன், தன் மனைவியுடன் சேர்ந்து உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனைவியும் உயிரிழப்பு

பாதுகாப்பற்ற முறையில் ரயிலின் கதவருகே நின்று பயணம் செய்வது எத்தகைய பேராபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.

இவர்களின் மறைவால் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் அந்த 3 பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது... ஒரு கணம் செய்த கவனக்குறைவு, ஒரு அழகான குடும்பத்தைச் சிதைத்துவிட்டது. இதுபோன்ற விபத்துகள் இனி நிகழாமல் இருக்க, பயணத்தின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.

3 பெண் குழந்தைகள்

இப்போது தம்பதி இருவரின் சடலங்களும், வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.. இருவரின் உடலை கண்டு மொத்த உறவினர்களின் அழுகுரல் அந்த இடத்தையே சோகமயமாக மாற்றியது. காட்பாடி ரயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கதவோரம் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஆபத்தான செயல்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.. எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வருவது என்பது எளிதான காரியம் அல்ல... பாவம் அந்த 3 பெண் குழந்தைகளும்!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+