வேலூர் இப்ராஹிமுக்கு வந்த சோதனை.. உள்ளூரிலேயே விரட்டிய முஸ்லிம்கள்! போலீசாரின் தடையை மீறியதால் கைது
வேலூர்: மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி துண்டு பிரசுரம் விநியோகிக்க சென்ற வேலூர் இப்ராஹிமை உள்ளே அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூட முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்தது. அதை தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தலிலும் பாஜக வெற்றிபெற்று 2 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த மே மாதத்தோடு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்தது.

அடுத்த ஆண்டு மே மாதத்துடன் பாஜகவின் ஆட்சி நிறைவடைந்து மக்களவைத் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில், மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், சமூக வலைதள பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் என பல்வேறு வகைகளில் பாஜக இப்போதே பிரச்சார பணிகளை தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாடு பாஜக சார்பிலும் மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், பல்வேறு ஊர்களில் நடைபெற்றன. இந்த நிலையில் பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளரான வேலூர் இப்ராஹிம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.
கடை வீதிகளிலும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கியும், பொதுமக்களிடமும் அவர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சித்தூர் கேட் மற்றும் தரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் வேலூர் இப்ராஹிம் துண்டு பிரசுரம் விநியோகிக்க சென்றபோது போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் போலீசாருக்கும் வேலூர் இப்ராஹிமுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை கண்டித்து வேலூர் இப்ராஹிம் தலைமையில் பாஜகவினரும் போலீசாரை கண்டித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற பகுதிகளில் வேலூர் இப்ராஹிம் தலைமையிலான பாஜகவினர் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க சென்றனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜகவினர் தங்கள் பகுதிக்குள் வருவதை அறிந்து அவர்களுக்கு எதிராக கண்ட முழக்கங்களை எழுப்பினர். தமுமுக, மஜக உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் அங்கு ஒன்று வேலூர் இப்ராஹிம் தங்கள் பகுதிக்குள் நுழையக் கூடாது எனக்கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அவர்கள் பாஜகவினரை நோக்கி நகர்ந்தபோது போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து தங்களின் அறிவுறுத்தலை மீறி துண்டு பிரசுரம் விநியோகிக்க சென்றதற்காக வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜகவினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications