வேலூர் ஜெகலட்சுமி சிக்கிட்டாங்க.. தென்னந்தோப்பில் காதல் மனைவி செய்த காரியம்.. வாழ்நாள் சான்றிதழ் வேற
வேலூர்: கணவருக்கு தெரியாமல் காதல் மனைவி செய்த காரியம், வேலூரில் அதிர்ச்சியை தந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வெளிநாட்டிற்கு சென்ற கணவர் பெயரில் போலியாக வாழ்நாள் சான்றிதழ் பெற்று 8 ஏக்கர் தென்னந்தோப்பை ரூ.85 லட்சத்துக்கு விற்பனை செய்த காதல் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

காதல்: சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் ரகுவீரபாண்டியன்.. 53 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் கெஜலட்சுமி.. 49 வயதாகிறது.. இவர்கள் இருவருமே அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள். அப்போதுதான் ஜெகலட்சுமிக்கும், ரகுவீரபாண்டியனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவருமே திருமணமும் செய்துள்ளனர்.. இப்போது, இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்..
கடந்த சில வருடங்களுக்கு முன் தம்பதி இருவரும், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த சின்னதாமன்சேரி பகுதியில் 8 ஏக்கர் 11 சென்ட் தென்னந்தோப்பு நிலத்தை வாங்கியிருக்கிறார்கள்.
மனஸ்தாபம்: அப்போது நிலம் இவர்கள் இருவரின் பெயரிலுமே வாங்கப்பட்டுள்ளது. பிறகு, தம்பதி இருவரும் மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்டனர்.. இதற்கு பிறகு ரகுவீரபாண்டின் அமெரிக்காவிலும், கெஜலட்சுமி சென்னையிலும் வேலை பார்த்து வந்தார்கள்.. இருவருமே டைவர்ஸ் கேட்டு சென்னை ஹைகோர்ட்டை நாடியிருப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ரகுவீரபாண்டியன் பெயரில், கெஜலட்சுமி போலியாக வாழ்நாள் சான்றிதழ் சென்று, அந்த 8 ஏக்கர் 11 சென்ட் தென்னந்தோப்பை ரூ.85 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்தபோதுதான், ரகுவீரபாண்டியன் இதுகுறித்து தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து, வேலூர் எஸ்பி ஆபீசில் புகார் சொல்லி உள்ளார்..
நிலம் விற்பனை: எனவே, போலீசாரும் இந்த புகார் தொடர்பாக விசாரிக்க தொடங்கினார்கள்.. இறுதியில், ஜெகலட்சுமி செய்த மோசடி, உண்மை என்று தெரியவந்தது.. இதையடுத்து, சத்துவாச்சாரியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த கெஜலட்சுமியை போலீசார் அதிரடியாக கைது செய்து செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள கணவர் பெயரில் போலி சான்றிதழ் பெற்று, ரூ.85 லட்சத்துக்கு நிலத்தை விற்ற இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications