வேலூர் டூ ராணிப்பேட்டை.. சென்னை, காஞ்சிபுரம் ரேஷன் கடைகளில் பார்த்தீங்களா? சபாஷ் தமிழக அரசு
வேலூர்: தமிழகத்தில் பெரிய வெங்காயம், தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி விலை அதிகமாகவே உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே, தக்காளி வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.. தக்காளி விலை ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதுவே சில்லறை கடைகளில் 100 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது..

தக்காளி: அதேபோல, 2 மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100ஐ தாண்டி செல்கிறது.
இந்த வெங்காய விலை உயர்வுக்கு காரணம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அளவுக்கு அதிகமான மழைப்பொழிவு என்கிறார்கள். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கும் அனுமதி கொடுத்ததால், இந்த விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, வெங்காயம், தக்காளி இவைகளின் விலை இனியும் உயரக்கூடும் என்கிறார்கள் வியாபாரிகள்.
பண்ணை பசுமை: எனவேதான், தமிழ்நாடு கூட்டுறவு சொசைட்டி மூலம் இயங்கும் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகள் விற்பனையை துவங்கியிருக்கிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி 49 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆனால், இவை இரண்டுமே, ஒரு நபருக்கு அதிகபட்சம், 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது...

சில்லறை கடைகளை விட சரிபாதி அளவுக்கு அரசு கூட்டுறவு சங்கமான பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் விலை குறைந்து காணப்படுவதால், இல்லத்தரசிகளுக்கு, அரசின் இந்த ஏற்பாடு மிகுந்த உபயோகமாக இருந்து வருகிறது.
பெரிய வெங்காயம்: தற்போது வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கிலோ, 70 - 80 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன... இதனால், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு அங்காடிகள் மற்றும் அம்மாவட்டங்களில் முக்கிய இடங்களிலுள்ள ரேஷன் கடைகளில், பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கின்றன.
இதற்காக, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம், 30 டன் வெங்காயத்தை, கூட்டுறவு துறை கடந்த வாரம் வாங்கியிருந்தது.. இதைத்தவிர, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளிடம் இருந்தும் தக்காளி வாங்கப்பட்டது. அந்தவகையில், கிலோ 50 முதல் 55 ரூபாய் வரை தக்காளி விற்கப்பட்டு வருகிறது..
கோரிக்கை: எனினும், சங்கங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் உள்ளதால், விலை கட்டுப்பாடு நிதியத்திலிருந்து நிதி வழங்கினால், முக்கிய நகரங்களில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பெரிய வெங்காயம், தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோரிக்கைகள் வலுக்க துவங்கியிருக்கின்றன.












Click it and Unblock the Notifications