வந்தார்.. வென்றார்.. செயலாற்றுகிறார்.. வேலூரில் விஜய் பெயரை காப்பாற்றிய வெற்றியாளர்!
வேலூர்: வேலூரில் உள்ளாட்சி தேர்தலில் வென்றவுடன் விஜய் ரசிகர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்கள்.
Recommended Video
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை போட்டியிட்டன.
இந்த தேர்தலுக்கான வாக்குகள் கடந்த 12 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் திமுக மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் நீதி மய்யம் படுதோல்வி அடைந்தது. அது போல் நாம் தமிழர் கட்சியும், பாஜகவும் தோல்வி அடைந்தன.

9 மாவட்டங்கள்
இந்த நிலையில் இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிட்டனர். இவர்கள் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான வெற்றியை பெற்றனர்.

13 பேர் போட்டியின்றி தேர்வு
நேற்று முன் தினம் மாலை வரை வார்டு உறுப்பினர்கள் 36 பேர் வென்றனர். 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மொத்தமாக 49 பேர் வென்றனர். நேற்று வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 9 மாவட்டங்களிலும் இதுவரை 109 பேர் வென்றுள்ளனர்.

புஸ்ஸி ஆனந்த்
இந்த தகவலை தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரதான கட்சியினரே தோல்வியை சந்தித்த நிலையில் அரசியலுக்கே வராமல் வென்று காட்டிய விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்ற கட்சியினரை திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

6ஆவது வார்டு
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்குள்பட்ட தாட்டிமானப்பல்லி ஊராட்சியில் 6 ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் வென்றார். அந்த பகுதியில் திருட்டு பயம் இருப்பதால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்குமாறு நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் வெற்றி பெற்ற மறுநாளே சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இறங்கியுள்ளது பலரது பாராட்டுக்குள்ளாகியுள்ளது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications