வந்தது யார்.. துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு பெரும் கலாட்டா.. நடந்தது என்ன?
Recommended Video

வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகனின், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் அதிகாலை முதல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அதன் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதேபோல அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார்.
வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு தீவிரமாக பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா நடைபெறுவதாக வருமானவரித் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

நள்ளிரவு சோதனை
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணியளவில் துரைமுருகனின் காட்பாடி இல்லத்திற்கு அதிகாரிகள் குழு ஒன்று சென்று தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்துள்ளது.
இதையடுத்து துரைமுருகன் தனது வழக்கறிஞர்களுக்கு போன் செய்து உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர்கள் வந்து சோதனையிட வந்ததாக கூறிய அதிகாரிகளிடம் அடையாள அட்டையை வாங்கி சோதித்து பார்த்துள்ளனர். அதில் தேர்தல் அதிகாரிகள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

வந்தது யார்
எனவே வந்திருந்தது வருமான வரித்துறை அதிகாரிகளோ அல்லது தேர்தல் செலவின பார்வையாளர்களா என்ற குழப்பம் ஏற்பட்டதால் அந்த அதிகாரிகளுடன் துரைமுருகனின் வழக்கறிஞர்கள் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே பெரும் அமளி துமளி ஆக காட்சியளித்தது.

அதிகாலை முதல் ரெய்டு
இதையடுத்து வருமானவரித் துறையின் உயர் அதிகாரிகள் சிலர் துரைமுருகனை தொடர்பு உண்டு அது தங்களது அதிகாரிகள்தான் என்று தெரிவித்துள்ளனர். ஒரு வழியாக சுமார் 3 மணி நேர தாமதத்திற்கு பிறகு அதிகாலை 3 மணி முதல், துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்வி குடும்பங்களில் கல்வி நிறுவனங்கள் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

குவிந்த திமுகவினர்
இருப்பினும் வருமானவரித்துறை சோதனை தானா என்பதை வருமான வரி துறை நேரடியாக தெரிவிக்கவில்லை. அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என்பதால் குழப்பம் நீடித்துக் கொண்டுள்ளது துரைமுருகனின் வீடு மற்றும் அவரது கல்வி நிறுவனங்களை சுற்றிலும் ஏராளமான திமுகவினர் குழுமி உள்ளனர்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications