Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடுப்பேற்றிய கள்ளக்காதல்.. "மிட்நைட்டில்" கிச்சனில் நுழைந்த மனைவி.. அடுத்து நடந்த "பகீர்"!

கணவன் கள்ளக்காதலை கைவிடாததால், மனைவி சுடுநீரை ஊற்றிவிட்டார்

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: நடுராத்திரி கிச்சனுக்கு சென்ற மனைவி செய்த காரியத்தால், தூங்கி கொண்டிருந்த கணவன் அலறி துடித்த சம்பவம் பரபரப்பை தந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி, மனைவி, 2 மகன்கள் இருக்கிறார்கள்.. அப்படி இருக்கும்போது, கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

 கண்ணை மறைத்த காதல்

கண்ணை மறைத்த காதல்

அடிக்கடி, கள்ளக்காதலியை இவர் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது... இவர்கள் 2 பேரும் ஜோடியாக ஊர் சுற்றியதால், கள்ளக்காதல் விஷயம் மனைவிக்கு தெரிந்துவிட்டது. இதனால், அதிர்ந்து போன மனைவி, கள்ளக்காதலை கைவிடுமாறு சொன்னார்.. ஆனால், கணவன் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை.. இதனால் மனவருத்தம் அடைந்த மனைவியால், நிம்மதியாக இருக்க முடியவில்லை.. மறுபடியும் மறுபடியும் கள்ளக்காதலை கைவிடும்படி கெஞ்சினார்.. கண்ணீர் வடித்தார்.

 மனக்குமுறல்

மனக்குமுறல்

அப்போதும் கணவன் மனம் மாறவில்லை.. இப்படியே இந்த ஒரு மாதமாகவே தம்பதிக்குள் இது தொடர்பாக கடும் வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்தது... தனக்கு கணவர் துரோகம் செய்ததை நினைத்து தினமும் மனக்குமுறலில் மனைவி தவித்தபடியே வந்தார்... கள்ளத்தொடர்பு சம்பந்தமாக கணவன் மனைவிக்குள், நேற்று முன்தினமும் வீட்டில் தகராறு ஏற்பட்டது... வழக்கம்போல், மனைவி பேச்சை, கண்டுகொள்ளாத கணவன், தூங்க சென்றுவிட்டார்.

வெந்நீர்

வெந்நீர்

இவ்வளவு சொல்லியும், கள்ளக்காதலை கைவிட மறுக்கும் கணவனை நினைத்து மனைவி, இரவெல்லாம் அழுது கொண்டே இருந்தார்.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து, கணவனுக்கு சரியான பாடம் புகட்டினால் மட்டுமே திருந்துவார் என்று முடிவு செய்தார்.. அதன்படி, நடுராத்திரி கிச்சனுக்கு சென்றார். அடுப்பு பற்ற வைத்து வெந்நீரை கொதிக்க வைத்தார்... ஆவி பறக்க கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை தூக்கி வந்து, தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆடைகளை விலக்கி விட்டு, அவரது மர்ம உறுப்பில் வெந்நீரை ஊற்றினார். இதனால் கணவன் வலியால் அலறி துடித்தார்.

 சுடுநீர் + அலறல்

சுடுநீர் + அலறல்

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துவிட்டனர்.. அவர்கள் இளைஞரை மீட்டு பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கணவரின் நிலைமை சீரியஸாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இப்போது தீவிர சிகிச்சை அங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மனைவியிடம் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+