தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து... ‘கரண்ட்’ இல்லாததால் உயிர் தப்பிய 5 அதிர்ஷ்டசாலிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் அங்கிருந்த மின்சாரக் கம்பம் உடைந்து சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்தபோது, மின்சாரம் இல்லாததால் அந்தக் காரில் பயணம் செய்த ஐந்து பேர் உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications