திருப்பதி மலைப்பாதையில் பிரேக் பிடிக்காத அரசு பஸ்.. டிரைவரால் உயிர் தப்பிய 40 பயணிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி திருமலையில் இருந்து 40 பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து ஒன்று நடுவழியில் பிரேக் பிடிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்தப் பேருந்தை ஓட்டி வந்த ஹரிபாபு என்ற டிரைவரின் சாமர்த்தியத்தால், மலைப்பாதையின் இடையில் பேருந்து பத்திரமாக நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 40 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சாமர்த்தியமாக செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்த ஹரிபாபுவைப் பயணிகள் பாராட்டினர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications