For Daily Alerts
Just In
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்...சேலத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அதிமுகவினர்
எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ருக்கொண்டதை சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாடினர்.
சேலம்: தமிழகத்தின் முதல்வராக எஅடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக்கொண்டதையடுத்து சேலத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததனால் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ளார். ஆகையால், அதிமுக சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனையடுத்து அவரை ஆளுநர் அழைத்தார்.
தற்போது தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ருக்கொண்டார். அதனை அவரது சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் பதவியேற்பை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
Comments
admk cadres salem celebration edappadi palanisamy chief minister அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம் முதல்வர் பதவியேற்பு எடப்பாடி பழனிச்சாமி
English summary
Admk cadres in all parts of Tamilnadu celebrating as Edappadi palanisamy swore as chief minister.
Story first published: Thursday, February 16, 2017, 19:27 [IST]