போர்சே காரை விட்டு ஆட்டோக்களை நொறுக்கிய போதை மாணவர்.. ஒருவர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்று அதிகாலை தாறுமாறாக ஓடிய போர்சே சொகுசு கார் ஒன்று, சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 12 ஆட்டோக்கள் சேதமடைந்த இந்த விபத்தில் ஆட்டோக்களில் உறங்கிக் கொண்டிருந்த 11 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த விகாஷ் என்ற இளைஞர் குடிபோதையில் இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவரின் மகன் ஆவார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விகாஷைக் கைது செய்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications