For Daily Alerts
Just In
பழைய 500, 1000 நோட்டுகளை மாற்ற... காலையிலேயே வங்கிகள் முன் குவிந்த மக்கள்- வீடியோ
சென்னை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று முன் தினம் இரவு முதல் செல்லாக்காசுகள் ஆனது. நேற்று வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் மக்கள் தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்தனர். இதனால் பெரும் சில்லறைப் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று மக்கள் தங்களது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையிலேயே வங்கி வாசல்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
Comments
English summary
The roads were empty and the banks were filled with people queueing up to exchange their Rs 500 and 1,000 notes after the same had been declared invalid on Tuesday midnight. All banks saw a large number of people queuing up since early morning.
Story first published: Thursday, November 10, 2016, 10:01 [IST]