கடைசியாகக் கூட ஜெ. முகத்தைப் பார்க்க முடியவில்லையே.. அதிமுக தொண்டர்கள் கதறல்- வீடியோ
சென்னை: ஜெயலலிதாவிற்கு உடல்நலம் சரியில்லை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததுமே அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் அப்பல்லோவிற்கு விரைந்தனர். ஆனால், 75 நாட்களாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போதும், ஜெயலலிதாவை தொண்டர்களால் பார்க்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி ஜெயலலிதா காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் இன்று வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பிரதமர், பிறமாநில முதல்வர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னையை நோக்கி படையெடுத்த அதிமுக தொண்டர்கள் எல்லாராலும் ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த இயலவில்லை. இதனால், மனமுடைந்த அதிமுக தொண்டர்கள் பலர், "கடைசியாகக் கூட அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே" என கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.