எல்லையில் நிறுத்தப்பட்ட லாரிகள்... ‘சரக்கு’களை மாற்றிக் கொள்ளும் புத்திசாலி டிரைவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: காவிரி பிரச்சினைகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையேயான சாலை வழிப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இன்னும் நிலைமை சீராகாததால், இரு மாநில எல்லைகளிலும் சரக்கு லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. இருதரப்பிலும் விரைவில் கெட்டுவிடும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் ஏற்றப்பட்ட லாரிகளும் இதில் அடக்கம். இதனால் நஷ்டத்தை சமாளிக்க எல்லையிலேயே கூலி ஆட்களைக் கொண்டு லாரிகளில் உள்ள பொருட்களை மாற்றி தங்களது மாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர் லாரி டிரைவர்கள். ஆனால், இதற்கு கூடுதல் செலவாவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications