சோ, பத்திரிகையாளராக மட்டுமல்ல.. பொதுமக்களின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்தார்: நாராயணசாமி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும், நாடக ஆசிரியருமான சோ ராமசாமி(82) நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில், சோ உடலுக்கு அஞ்சலி செலுத்திய புதுவை முதல்வர் நாராயணசாமி, பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "சோ மிகச்சிறந்த பத்திரிகையாளராக மட்டுமல்ல, பொதுமக்களின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தார். தன் கருத்துக்களை அச்சமின்றி எடுத்துக் கூறும் விமர்சகராக, நல்ல ஆலோசகராக இருந்தவர்" எனப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications