இதுதான் ஓபிஎஸ்-ன் புதிய போயஸ் கார்டன் வீடு!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போயஸ் கார்டன் வீனஸ் காலனியில் புதிய வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு பங்களாவை காலி செய்துவிட்டு போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு பின்புறம் உள்ள வீனஸ் காலனியில் இன்று குடியேறினார்.
முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிரீன்வேஸ் சாலையில் பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்னும் 6 மாத காலம் அதில் ஓ. பன்னீர்செல்வம் தங்க முடியும்.

ஆனால் தமிழக அரசோ ஓ. பன்னீர்செல்வம் அந்த பங்களாவில் இருந்து உடன்வே வெளியேற நெருக்கடி கொடுத்து வந்தது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் அதாவது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு பின்பகுதியில் வீனஸ் காலனியில் இன்று ஓ. பன்னீர்செல்வம் குடியேறினார்.
இன்று காலை புதிய வீட்டில் பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓ. பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications