மிரட்டி பணம் பறிப்பதாக முதல்வரிடம் புகார்.. பிரபல ரவுடி கர்ணா வீட்டில் போலீஸ் அதிரடி ரெய்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி கர்ணா தனது கூட்டாளிகள் மூலம் பிரபல தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கு புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து புதுவை முதலியார்பேட்டை அனிதா நகரில் உள்ள கர்ணாவின் வீட்டில் ஒதியஞ்சாலை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து லட்சக்கணக்கில் பணம், சொத்து பத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை புதுவையில் உள்ள மற்ற ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications