தண்ணீரில் தத்தளிக்கும் பெங்களூரு நகரம்.... ஏரிகள் உடைப்பு, டிராபிக் ஜாம்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று இரவு சுமார் 11 மணிக்கு ஆரம்பித்த மழை இன்று காலை வரை விட்டு, விட்டு கொட்டி தீர்த்தது.
பருவமழையின் தீவிரம் பெங்களூரு நகரை உலுக்கி வருகிறது. இந்த பெரும் மழை காரணமாக, சாலைகளில் வெள்ள நீர் தேங்கி வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒசூர் சாலை, பொம்மனஹள்ளி அருகேயுள்ள கோடிச்சிக்கனஹள்ளி பகுதியில் இடுப்பு அளவுக்கு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சிக்கி சில பைக்குகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில், மழை நீரில் சிக்கி வாகனங்கள் மிதக்கின்றன. அப்படி ஒரு காட்சிதான் இந்த வீடியோ












Click it and Unblock the Notifications