கடன் தொல்லை... மனைவி, 2 மகள்களைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபர்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி அருகே புதுப்பட்டியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் திடீரென கழுத்தறுத்துக் கொண்ட முருகனை அக்கம்பக்கத்தார் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்க முயற்சித்தபோது தான், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை காரணமாக முருகனே தனது மனைவி மற்றும் மகள்களைக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்தது தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+