உடும்பு கறி சமைக்க முயன்ற 7 பேர் கைது: வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரியில் வனப்பகுதியில் உடும்பு கறியை சமைக்க முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மான், சிறுத்தை, புலி, உடும்பு, பாம்பு என பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ரோந்துப்பணியில் வரும் போது நாரணப்பள்ளி காப்புகாட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 7 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் உடும்பு கறி சமைக்க முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து தர்மபுரி மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த அந்த 7 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications