Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று, நாளை சிறப்பு பஸ்கள்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கிருஷ்ணஜெயந்தி, சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகளை தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. விடுமுறையையொட்டி, பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கல்வி, வேலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட தொழில் நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்கள், பண்டிகை தினங்கள், தொடர் விடுமுறைகளில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

Vilupuram bus

தற்போது வார விடுமுறை, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் முகூர்த்த நாள்களும் அடுத்தடுத்து வருகின்றன. இதனால், பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே, பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு வாரமும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதும் சிறப்பு பேருந்துகளுக்கான குட் நியூஸை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி நாள்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் 330 சிறப்புப் பேருந்துக் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் கூறியுள்ளதாவது: வார இறுதி நாள்களையொட்டி ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, போளூா் ஆகிய ஊா்களுக்கு பொதுமக்கள் அதிகமாகப் பயணம் செய்யும் வாய்ப்புள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு பயணிகளின் வசித்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) கூடுதலாக 165 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) 165 பேருந்துகளும் என மொத்தம் 330 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூா், ஒசூா், புதுச்சேரி (கிழக்கு கடற்கரைச் சாலை வழி), திருவண்ணாமலை (ஆற்காடு-ஆரணி வழி), திருவண்ணாமலை (காஞ்சிபுரம், வந்தவாசி வழி) ஆகிய ஊா்களுக்கு ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் தலா 40 பேருந்துகள் என 80 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.

மேலும், பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும். சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க தேவையான அலுவலா்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+