பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று, நாளை சிறப்பு பஸ்கள்
விழுப்புரம்: கிருஷ்ணஜெயந்தி, சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகளை தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. விடுமுறையையொட்டி, பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கல்வி, வேலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட தொழில் நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்கள், பண்டிகை தினங்கள், தொடர் விடுமுறைகளில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

தற்போது வார விடுமுறை, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் முகூர்த்த நாள்களும் அடுத்தடுத்து வருகின்றன. இதனால், பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே, பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு வாரமும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதும் சிறப்பு பேருந்துகளுக்கான குட் நியூஸை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி நாள்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் 330 சிறப்புப் பேருந்துக் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் கூறியுள்ளதாவது: வார இறுதி நாள்களையொட்டி ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, போளூா் ஆகிய ஊா்களுக்கு பொதுமக்கள் அதிகமாகப் பயணம் செய்யும் வாய்ப்புள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு பயணிகளின் வசித்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) கூடுதலாக 165 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) 165 பேருந்துகளும் என மொத்தம் 330 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூா், ஒசூா், புதுச்சேரி (கிழக்கு கடற்கரைச் சாலை வழி), திருவண்ணாமலை (ஆற்காடு-ஆரணி வழி), திருவண்ணாமலை (காஞ்சிபுரம், வந்தவாசி வழி) ஆகிய ஊா்களுக்கு ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் தலா 40 பேருந்துகள் என 80 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.
மேலும், பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும். சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க தேவையான அலுவலா்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications