செஞ்சியில் மணல் கொள்ளையர்களை சுட முயற்சி.. மாட்டின் மீது பாய்ந்த குண்டு... 5 பேர் கைது
செஞ்சி:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கெடார் என்ற இடத்தில் கடந்த 30ஆம் தேதி நள்ளிரவு வீரா மூர் ஏரியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தபோது அப்போது அங்கிருந்த சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மாடு பலத்த காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர், அப்போது, புதுச்சேரி மற்றும் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிலர் பயிற்சி பெற்ற துப்பாக்கிகளுடன் இரவு நேர வேட்டையில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிகளுடன் இரவு நேர வேட்டைக்கு சென்ற போது அவர்கள் சுட்டுள்ளனர். ஆனால், துப்பாக்கி குண்டு, தவறுதலாக மாட்டின் மீது பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களில் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
மேலும் 7 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து நவீன ரக துப்பாக்கி மற்றும் ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பீதி நிலவி வந்தது தற்போது மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.