விழுப்புரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்... கர்ப்பிணி உட்பட 4 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகரில் செஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. வடவானூர் வழியாக திருவண்ணாமலையில் இருந்து திண்டிவணம் நோக்கி வந்த சொகுசு கார், விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் சென்று எதிரே வந்த பைக் மீது மோதியுள்ளது. இந்த மோசமான விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அதில் ஒருவர் கர்ப்பிணி பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 3 வயதும் குழந்தையும் இதில் பரிதாபமாக பலியாகி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெரியகரம் பகுதியை சேர்ந்த குமரேசன், கர்ப்பிணி நந்தினி என்று தெரியவந்துள்ளது. அதேபோல் இளம்பெண் நித்யா, மூன்று வயது செந்தமிழ்செல்வி ஆகியோரும் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து செஞ்சி சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. அப்பகுதி மக்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications