விழுப்புரத்தில் காவலர் மனைவி கங்காதேவிக்கு ஷாக்.. அதிகாலையில் ஆடிப்போக வைத்த டவுசர் கொள்ளையர்கள்
விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த வளவனூர் தோப்பு காலனி பகுதியில் வசித்து வரும் காவலர் ராஜசேகர் என்பவர் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது மனைவியிடம் 4.5 பவுன் தங்க நகையை முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் தோப்பு காலனி பகுதியில் 32 வயதாகும் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 19ம் தேதி ராஜசேகர் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நேற்று அதிகாலை 4 மணியளவில் முகமூடி அணிந்தபடி டவுசர் மட்டுமே அணிந்திருந்த கொள்ளையர்கள் 3 பேர் வந்துள்ளனர். போலீஸ் ஏட்டு ராஜசேகர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திடீரென உள்ளே புகுந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் 3 பேரும் அங்கிருந்த ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த ராஜசேகரின் மனைவி கங்காதேவியின் (30) கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் நகையை பறிக்க முயன்றார்கள்.
உடனே தூக்கத்தில் இருந்து எழுந்த கங்காதேவி, தனது நகையை கையால் இறுக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.இந்த சத்தம் கேட்டதும் பக்கத்து அறையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த ராஜசேகர் உடனடியாக எழுந்து மின்விளக்குகளை போட்டிருக்கிறார். அதற்குள் அந்த கொள்ளையர்களில் ஒருவன் ராஜசேகரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியும், மற்றொருவன் ராஜசேகரின் குழந்தையை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறான்.
உடனே மற்றொரு கொள்ளையன், கங்காதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் நகையை பறித்தான். பின்னர் அந்த கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து வீட்டின் பின்புற தோட்டம் வழியாக தப்பி ஓடினார்கள் அவர்களை பொதுமக்கள் உதவியுடன் ராஜசேகர் பிடிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பறிபோன நகையின் மதிப்பு ₹4 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications