பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து சிறுமி இறந்த வழக்கு! உள்ளாடை நனையாதது ஏன்? உறவினர்கள் சந்தேகம்
விழுப்புரம்: விழுப்புரம் விக்கிரவாண்டி மாவட்டத்தில் செப்டிக் டேங்கில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அவருடைய உள்ளாடைகள் மட்டும் நனையாதது ஏன் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் இசேவை மையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களுக்கு மூன்றரை வயதில் லியா லட்சுமி என்பவர் இருந்தார்.

இந்த குழந்தை விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இவர் நேற்றைய தினம் பள்ளிக்குச் சென்றார். அவரை பழனிவேல்தான் பள்ளியில் விட்டுவிட்டு தனது வேலைக்குச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் மதியம் 1.45 மணிக்கு சிறுமி சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி ஆசிரியையிடம் சொன்னார். அவரும் சிறுமியை கழிப்பறைக்கு செல்ல அனுமதித்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தை மீண்டும் வகுப்புக்கு வராததால், ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்து கழிப்பறையில் தேட சென்றார்.
அப்போது அங்கு இருந்த செப்டிக் டேங்க் மீது போடப்பட்டிருந்த துருப்பிடித்த இரும்பு மூடி உடைந்து காணப்பட்டதை கண்டார். ஒரு வேளை குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பள்ளி ஓட்டுநர் கோபாலை அழைத்து செப்டிக் டேங்கில் தேட சொல்லியுள்ளனர்.
அப்போது அந்த செப்டிக் டேங்கில் சிறுமியின் ஷூ இருந்ததை கண்டறிந்தார். உடனே அங்கிருந்த கம்பியை எடுத்து குழந்தையின் ஆடையை பிடித்து இழுத்து மேலே தூக்கினார். பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பழனிவேல், மருத்துவமனையில் தனது குழந்தையின் உடலை கட்டி அணைத்துக் கொண்டு எழுந்திரும்மா அப்பாவுடன் வீட்டுக்கு போய்விடலாம் என கண்ணீர் மல்க கதறி அழுதார்.
இதுகுறித்து பழனிவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் குழந்தை இயற்கையான முறையில் இறக்கவில்லை, என் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
செப்டிக் டேங்க் அருகே கிடந்த குழந்தையின் உள்ளாடை நனையாமல் காய்ந்த நிலையில் இருந்தது குறித்தும் பெற்றோர் சந்தேகம் எழுப்புகிறார்கள். சிறுமியின் தந்தை புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூவரையும் நள்ளிரவு 2 மணிக்கு போலீஸார் கைது செய்தனர்.
குழந்தையின் உடலுக்கு இன்று காலை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அந்த குழந்தையின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள், அப்பகுதி மக்கள் விழுப்புரம்- சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அப்போது போராட்டக்காரர்கள் கூறுகையில், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் 6 மாதத்திற்கு ஒரு முறை பள்ளியை வந்து ஆய்வு செய்ய வேண்டும். எல்கேஜி, யுகேஜி குழந்தை இயற்கை உபாதை கழிக்க செல்லும் போது ஒரு ஆயாம்மா இருக்க வேண்டாமா, பள்ளிக்கு எவ்வளவு காசு வாங்குகிறார்கள். ஏன் அந்த இத்து போன மூடியை கூட மாற்றாமல் இவர்கள் என்ன நிர்வாகம் நடத்துகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications