ஜஸ்ட் மிஸ்! குறுக்கே வந்த டூவிலர்! சடர்ன் பிரேக் அடித்த டிரைவர்! டென்ஷன் ஆன அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடியின் கார் மோதியதில் டூ வீலரில் சென்ற ஒருவர் காயமடைந்தது நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது ஓட்டுநர் மீது டென்ஷன் ஆன அமைச்சர் பொன்முடி, கவனமாக ஓட்டுமாறு கடிந்து கொண்டிருக்கிறார்.
திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி முடிந்த பிறகு விழுப்புரம் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது காராமணிகுப்பம் என்ற இடம் அருகே அமைச்சர் பொன்முடி கார் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜோதி என்பவர் மீது மோதியிருக்கிறது.
நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் காயமடைந்த இரு சக்கர வாகன ஓட்டியை அமைச்சர் பொன்முடியின் பாதுகாவலர்கள் எஸ்கார்ட் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.
இதனிடையே பொன்முடியின் ஓட்டுநர் மட்டும் சடர்ன் பிரேக் அடிக்காமல் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்திருந்தால் விவகாரம் வில்லங்கமாகி இருக்கும்.
இதனிடையே காயம் அடைந்த நபரை மருத்துவமனை அனுப்பிவைத்துவிட்டு புறப்பட்ட அமைச்சர் பொன்முடி, தனது ஓட்டுநருக்கு கடுமையாக டோஸ் விட்டிருக்கிறார்.
ஏற்கனவே அமைச்சர் பொன்முடி ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் நேற்று நடந்த நிகழ்வு அவரது ஆதரவாளர்களை பதற்றம் அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications