விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தள்ளுவண்டியில் 5 வயது சிறுவன் சடலத்தை கிடத்திவிட்டு கண்ணீருடன் செல்லும் இருவர்.. புதிய வீடியோ

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் கிடத்தப்பட்ட 5 வயது குழந்தை இறந்து கிடந்த வழக்கில் குழந்தையை சலவை வண்டியில் போட்டுவிட்டு கண்ணீருடன் செல்லும் இருவரின் மற்றொரு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    விழுப்புரம்: குழந்தை இறந்த விவகாரத்தில் ட்விஸ்ட்: வெளியானது புதிய சிசிடிவி காட்சி!

    விழுப்புரத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல் தெரு என்ற இடத்தில் சிவக்குமார் (45) என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரமாக தள்ளுவண்டியில் சலவைத் தொழில் செய்து வருகிறார்.

    பரவும் ஓமிக்ரான்... 5 மாநில சட்டசபைத் தேர்தல் தள்ளிப்போகிறதா? - தேர்தல் ஆணையர் சொல்வதென்ன? பரவும் ஓமிக்ரான்... 5 மாநில சட்டசபைத் தேர்தல் தள்ளிப்போகிறதா? - தேர்தல் ஆணையர் சொல்வதென்ன?

    விழுப்புரத்தில், கடந்த 15-ஆம் தேதி விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த துணி சலவை செய்யும் வாகனத்தில், 5 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அங்கிருந்தவர்கள் எழுப்பினர்.

    அசைவில்லாத சிறுவன்

    அசைவில்லாத சிறுவன்

    ஆனால் சிறுவன் அசைவில்லாமல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததில் அவர்கள் வந்து பார்த்த போது சிறுவன் பலியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிறுவனின் உடலுக்கு உரிமை கோர யாரும் வரவில்லை.

    யாருடைய குழந்தை

    யாருடைய குழந்தை

    இதுதொடர்பாக இறந்தது யார், யாருடைய குழந்தை என்பது குறித்து 4 தனிப்படை அமைத்து விழுப்புரம் மேற்கு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குழந்தையை இருவர் தூக்கி செல்லும் காட்சிகள் இதுவரை 3 வீடியோ காட்சிகள் போலீசாரால் வெளியிடப்பட்டன.

    4ஆவது வீடியோ

    4ஆவது வீடியோ

    இந்நிலையில் தற்போது நான்காவது வீடியோ பதிவில் குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து விட்டு இருவரும் தனியாக நடந்து வரும் வீடியோ பதிவு போடப்பட்டுள்ளன. இவர்கள் யார் என்பது குறித்து விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணை மேற்கொண்ட நிலையில் இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அங்கு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கண்ணீர் விட்ட காட்சிகள்

    கண்ணீர் விட்ட காட்சிகள்

    ஏற்கனவே இறந்த குழந்தையை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது குழந்தையின் சடலத்தை போட்டுவிட்டு கண்ணீருடன் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. எனவே விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களில் அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

    English summary
    New video released about 5 years old boy's body recovered in Villupuram. They broke down after placing that boy's body.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X