ராமதாஸ் Vs அன்புமணி.. இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல.. இணைந்து செயல்பட வேண்டும் - ஜிகே மணி
விழுப்புரம்: எல்லோரும் பேசுவதை விட ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வதுதான் கட்சிக்கு பலமாக இருக்கும். இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல. இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் ஆசை என்று பாமக கெளரவத் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் மகளின் மகன் முகுந்தன் மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் மோதல் தொடங்கிவிட்டது. பாமகவில் உள்கட்சி பிரச்னை சமீபகாலமாக பூதாகரமாகி வருகிறது. தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு பொது வெளியிலேயே அம்பலமாகிவிட்டது. இந்நிலையில், பொது வெளியிலேயே நேற்று அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தார்.

என் மீது ஐயா ராமதாஸுக்கு கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் என பாமக பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசியிருந்தார். மேலும் ராமதாஸ் டென்ஷன் ஆக வேண்டாம். என்ன செய்ய வேண்டுமோ அதை சொல்லுங்கள், மகனாக, கட்சியின் தலைவராக நான் செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எல்லோரும் பேசுவதை விட ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வதுதான் கட்சிக்கு பலமாக இருக்கும். இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல. இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் ஆசை என்று பாமக கெளரவத் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்திப்பதற்காக பாமக கெளரவத் தலைவர் ஜிகே மணி வருகை புரிந்தார். அதைத்தொடரந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: "ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அன்புமணி ராமதாஸ் நேற்று சொல்லியிருக்கிறார். அதனை நாங்கள் மறுக்கவில்லை. இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சூழ்நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறோம்.
இருவரும் சேர்ந்து பேசி தீர்வு கண்டால் கட்சிக்கு பலமாக இருக்கும். கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தலை சந்திப்பதற்கும், கட்சியினருக்கும் உள்ள மன உளைச்சல்களுக்கு நல்ல தீர்வாக அமையும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதை தான் தினந்தோறும் பேசி வலியுறுத்தி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம்.
பொதுவெளியில் அன்புமணி மன்னிப்பு கேட்டது குறித்து கேட்ட கேள்விக்கு, இதற்கு மேல் நான் எதுவும் பேசக்கூடாது. இருவரும் பேசி அடுத்த கட்டத்துக்கு சென்றால் பலமாக இருக்கும். எங்கள் மன உளைச்சலுக்கு ஒரு தீர்வாக இருக்கும். நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம். ஆனால் சுமூகத் தீர்வு எட்டவில்லை. எல்லோரும் பேசுவதை விட இருவரும் சேர்ந்து பேசி நல்ல முடிவு எடுப்பது தான் நல்லது. அவர்கள் அரசியல் விவரம் புரியாதவர்கள் அல்ல. இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுப்பது தான் நல்லது என்றார்.
-
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications